Posts

Showing posts from May, 2015

இளநீரின் எண்ணற்ற நன்மைகள்

Image
மனிதர்களுக்கு இயற்கை வழங்கியுள்ள கொடைகளில் ஒன்றான இளநீர், எண்ணற்ற நன்மைகளை அள்ளித் தருகிறது. இது வெப்பத்தைத் தனித்து, செரிமான சக்தியை அளிக்கும். இளநீர் குடித்தால் ரத்தம் சுத்தமடைவதொடு மட்டுமல்லாமல், கல்லீரல் நன்றாக இயங்கவும் உதவுகிறது. பெண்களின் மாதவிலக்கின்போது ஏற்படும் அடிவயிற்று வலிக்கு இளநீர் சிறந்த மருந்து. பேதி, சீதபேதி, ரத்த பேதி ஆகும்போது பிற உணவுகளை தவிர்த்துவிட்டு உடனடியாக இளநீர் பருகிவர, உடல் அசதி, மயக்கம் வராது. சிறுநீரகக்கல், சதையடைப்பு, சிறுநீர்க்குழாய் பாதிப்பு போன்ற கோளாறுகள் வந்துவிட்டால் முதல் மருந்தே இளநீர்தான். டைபாய்டு, மலேரியா, மஞ்சள் காமாலை, அம்மை நோய்கள் போன்றவற்றால் பாதிக்கபடும் போது இளநீரைத் தாராளமாகக் குடிக்க வேண்டும். அறுவைச் சிகிச்சைகளுக்குப் பின் திரவ உணவு மட்டுமே சாப்பிட வேண்டிய சமயங்களில் இளநீருக்கு முன்னுரிமை வழங்கி உபயோகிப்பதால் அறுவைச் சிகிச்சைப்புன் விரைவில் குணமடையும். இவ்வளவு நன்மைகளை மனிதனுக்கு வழங்கும் இளநீரை வெறும் வயிற்றில் குடிப்பதைத் தவிக்க வேண்டும். ஏனெனில், தூங்கி எழுந்தவுடன் வயிறு சற்று சூடாக இருப்பதால், இளநீ

கொய்யாவில் குவிந்திருக்கும் சத்துக்கள்

Image
மலிவாகக் கிடைக்ககூடிய பழமான கொய்யாவில் பல்வேறு சத்துகள் குவிந்திருக்கின்றன. இதில் வைட்டமின்-பி, சி ஆகிய உயிர்ச்சத்துகள், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. மற்ற பழங்களை ஒப்பிடும்போது கொய்யாவில் வைட்டமின்-சி அதிகம் உள்ளதால், வளரும் குழந்தைகளுக்கு இப்பழம் ஒரு வரப்பிரசாதமாகும். மலச்சிக்கலால் அவதிப்படும் நபர்கள் கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால், அப்பிரச்சனையில் இருந்து மீளலாம். கொய்யாப் பழத்தை நறுக்கிச் சாப்பிடுவதை விட அப்படியே சாப்பிடுவதால் பற்கள, ஈறுகள் வலுவடையும். இந்தப் பழம் செரிமான உறுப்புகளை வலுப்படுத்தும் ஆற்றல் பெற்றது. இதனை உண்பதால் வயிறு, குடல், இரைப்பை, கல்லீரல் மற்றும் மண்ணீரல் போன்றவை வலுப்பெறும். ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து கொய்யாவை உட்கொண்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். கொய்யாப் பழத்தில் உள்ள லைகோபைன் மற்றும் கரோட்டினாய்டுகள், புற்றுநோய்க் கட்டிகளைக் குணப்படுத்தும் தன்மை கொண்டவை. கொய்யாப் பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளதால், ரத்த அழுத்தத்தைச் சீராக வைத்துக் கொள்ளலாம். கொய்யாப் பழத்தை தோல் நீக்

நோய் அறிகுறிகளை முன்கூட்டியே தெரிவிக்கும் நமது உடல் உறுப்புகள்.

Image
உங்களுக்கு என்ன நோய்? உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம். கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி? சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும். டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும். கண் இமைகளில் வலி.. என்ன வியாதி? அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது. டிப்ஸ்: போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். அதோடு உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம் என்ன வியாதி? அதிகமாக வேலை செய்து கொண்டே இருப்பது. இந்த ஸ்டிரெஸ்ஸினால் உங்கள் மூளை குழப்

அவரையின் முக்கிய மருத்துவ குணங்கள்

Image
அவரைக்காய், பல அறிய மருத்துவ குணங்களைக் கொண்டது என்பது உங்களுக்குத் தெரியுமா? அவரைக்காயில் பிஞ்சுக்காயே அதிக அளவில் விரும்பி உண்ணப்படுகிறது. அவரைக்காய் நல்ல சுவையைக் கொண்டது. எளிதில் ஜீரணமாகும் தன்மை உடையதால் இதன் சத்துக்கள் விரைவில் உடலில் சேரும். இதில் சுண்ணாம்புசத்து, வைட்டமின்கள் இருப்பதால் இளைத்த உடல் தேறும். அவரைப் பிஞ்சுகளை நறுக்கி அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து வதக்கி உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் வலுப்பெறும். நோய்க்கு மருந்து சாப்பிடும் காலத்திலும், விரதம் இருக்கும் காலத்திலும் அவரைக்காயை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். இது உடலுக்குப் பலத்தைக் கொடுப்பதுடன், விரத காலத்தில் மன அமைதியை அதிகரிக்க உதவும். சிந்தனையைத் தெளிவுபடுத்தும். பித்தத்தினால் உண்டாகும் கண் சூடு, கண் பார்வை மங்கல் போன்ற கண் பாதிப்புகளுக்கு அவரைக்காய் சிறந்த மருந்தாகும். அவரைப் பிஞ்சை வாரம் இருமுறை சமைத்து உண்டுவந்தால் பித்தம் குறைந்து, கண் நரம்புகள் குளிர்சியடைந்து மங்கிய பார்வை தெளிவடையும். அவரைக்காயை அதிகம் உண்டுவந்தால் வெள்ளெழுத்துக் குறைபாடுகள் நீங்கும். அவர

புதினாவின் நன்மைகள்

Image
புதினாவின் அளவிடமுடியாத நன்மைகள் பற்றி தெரிந்துகொள்வோம்!   உணவே மருந்து என்பது தமிழர்களின் பாலபாடம். நம் முன்னோர்கள் தங்களுக்கு வரும் நோய்களை, உணவில் மாற்றங்கள் செய்ததன் மூலம் போக்கிக் கொண்டனர். இந்த வரிசையில் தமிழர்களின் உணவில் அடிக்கடி இடம்பெறும் ஒரு தாவரம் புதினா. மடிந்த விளிம்புகளுடன் கூடிய பச்சைப் பசேலென்ற இலைகளுடன் காணப்படும் புதினா அபாரமான மனமும்,ருசியும் கொண்டது. புதினா ஒரு புதிரான தாவரமும் கூட. புதினாவில் வயல் புதினா, காரன் புதினா, ஜப்பானிய புதினா, கோசி, பேப்பர் மின்ட் என்பன உள்பட 40 வகை புதினாக்கள் இருக்கின்றன. இதில் ஏ,பி,சி வைட்டமின்கள், துத்தநாகம், தாமிரம், மாங்கனீசு, இரும்பு, பொட்டாசியம், சுண்ணாம்பு, நார், புரதம் என்று பல்வேறு சத்துகளும் நிரம்பி உள்ளன. இதில் உள்ள ஆண்டி ஆக்சிடன்ட் பொருட்கள் பெருங்குடல் புற்றுநோயை தீர்க்கும் என்று மருத்துவ உலகம் கண்டறிந்துள்ளது. 5 ரூபாய்க்கு கை நிறைய கிடைக்கும் புதினாவில் உள்ள மருந்து வசக்தி அபாரமானது. பத்து புதினா இலைகளை கழுவி பச்சையாக அப்படியே மென்று சாப்பிடலாம். அல்லது புதினா இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து அருந்தலாம். புத