Posts

Showing posts from January, 2019

நீண்ட வாழ்வுக்கு ஒரு உணவு அது நீராகாரம்

Image
இன்றைய எந்திர யுகத்தில் மனிதனுக்கு உதவி புரியும் தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கேற்ப, நோய்களும் நாளும் நாளும் அதிகரித்து கொண்டே வருகின்றன. புற்றீசல்போல் பெருகி வரும் நோய்களை கட்டுப்படுத்த விதவிதமான மருந்துகள் கண்டிபிடித்தபோதிலும் மனிதனின் ஆயுள் குறைந்து வருகிறது என்பதுதான் உண்மை. முப்பது ஆண்டுகளுக்கு பின்னால் சென்று பார்த்தால் அன்று என்பது வயது அல்லது தொண்ணுறு வயது வரை மனிதனின் ஆயுட்காலம் இருந்தது. தொண்ணுறு வயது முதியவர் கூட இளமை துடிப்புடன் சுறுசுறுப்புடன் இயங்கினார். அனால் இன்றோ ஒருவர் அறுபத்தைந்து வயதை நெருங்கி விட்டாலே, ஏன் பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலே அவர் முதியவர் என்ற பட்டத்தை சுமந்தாக வேண்டிய அவல நிலை இன்று உள்ளது. எங்கும், எளிதில் பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பம் கைக்கு வந்துவிட்டபோதிலும், எந்த ஒரு நோய்களையும் தீர்க்கும் வகையில் மருத்துவ உலகம் வளர்ந்த போதிலும் மனிதனின் ஆயுட்காலம் ஏன் குறைந்து வருகிறது? தொழில்நுட்பம், மருத்துவ வசதிகள் மட்டுமே மனிதனின் ஆயுட்காலத்தை நிர்ணயித்து விட முடியாது. அந்த காலத்தில் இதுபோன்ற மருத்துவ வசதிகளும், தொழில்நுட்பமுமா இருந்தது? ஆனால் அ

அரிசி கஞ்சியில் உடல் நலத்தை வலுப்படுத்தும் ஊட்டச்சத்துக்கள்

Image
சாதம் வடித்த கஞ்சியை வேண்டாதாஹ் பொருளாக நினைத்து கொட்டுடது தான் நிறைய பேரின் வழக்கம். அதில் உடல் நலத்தை வலுப்படுத்தும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பது பலருக்கும் தெரிவதில்லை. அந்த கஞ்சி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை தெரிந்து கொள்வோம். அரிசி கஞ்சியை தலையில் தேய்த்து வந்தால் தலைமுடி மிருதுவாகவும், பளபளப்பாகவும் மின்னும். குளித்து முடித்தவுடன் கஞ்சியை தலைமுடியில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவ வேண்டும். தலையை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளவும் இது உதவும். ஒரு டம்ளர் அரிசி கஞ்சியில் சிறிது மோர் கலந்து சாப்பிட்டு வருவது உடலுக்கு குளிர்ச்சியளிக்கும். அரிசி கஞ்சியுடன் சிறிதளவு புதினா, சீரகத்தூள் கலந்து குடித்தால் ஜீரண சக்தி பெருகும். கால்வலியால் அவதிப்படுபவர்கள் அரிசி கஞ்சியுடன் வெந்நீர், கல் உப்பு கலந்து மிதமான சூட்டில் கால்களை முக்கி வைக்கலாம். கால் வீக்கத்தை குறைக்கும் வலி நிவாரணி இது. துணிகளுக்கு கஞ்சி போடவும் பயன்படுத்தலாம். துணிகளை துவைத்ததும் ஒரு பக்கெட் தண்ணீரில் ஒரு டம்ளர் கஞ்சியை கலந்து துணிகளை முக்கி எடுத்தால் பளபளப்பாக மின்னும். அதனை ‘அயர்ன்’ செய்தால் அழகாக காட்

கோழி முட்டையில் என்னென்ன இருக்கிறது தெரியுமா?

Image
கோழி முட்டையில் என்னென்ன இருக்கிறது தெரியுமா? 100 கிராம் கோழி முட்டையில் தன்ணீர் 75 கிராம். கார்போஹைட்ரேட் 1.12 கிராம், கொழுப்பு 10.6 கிராம், கொலஸ்ட்ரால் 373 மி.கிராம், புரதச்சத்து 12.6 கிராம் வைட்டமின் ஏ, வைட்டமின் டி உள்ளிட்ட பத்து வகை வைட்டமின்கள், கால்சியம், இரும்பு உள்ளிட்ட ஏழு வகை தாதுச்சத்துகள், ஒமேகா 3 கொழுப்பு அமிலம் எனப் பல சத்துகள் உள்ளன. ஒரு முட்டை சாப்பிட்டால் 155 கலோரி ஆற்றல் கிடைக்கிறது. ஒரு நேரத்தில் இரண்டு முட்டை சாப்பிட்டால் ஒரு சராசரி மனிதருக்குக் காலை உணவுக்குத் தேவையான சக்தி கிடைத்துவிடும். இன்றைய தினம் துரித உணவகங்களில் பல வகை வண்ணச் சுவையூட்டிகளையும் மசாலாக்களையும், எண்ணெய்களையும் கலந்து பலதரப்பட்ட முட்டை உணவுகளைத் தயாரிக்கிறார்கள். முட்டையால் கிடைக்கிற கொலஸ்ட்ரால் ஆபத்தை விட, இந்தக் கலப்புப் பொருள்களால் குடல் புற்று நோய் உள்ளிட்ட ஆபத்துகள் வருவத்தான் பெரும் கவலைக்குரிய விஷயம். ‘முட்டையை வேக வைக்காமல், பச்சையாகக் குடித்தால் உடலுக்கு அதிகச் சத்து கிடைக்கும்’ என்று பொதுமக்களிடம் ஒரு நம்பிக்கை உள்ளது, குறிப்பாக, குழந்தைகள், இளம்பெண்கள், தடகள வீரர்கள், உடலுக்கு

உணவு சாப்பிடும்போது பேசாதீர்கள்!

Image
சாப்பிடும்போது பேசக்கூடாது. உணவை ரசித்து சாப்பிட வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அந்த பெரியோர்கள் சொல்லுக்கு விஞ்ஞ‍ான பூர்வமாகவும் விளக்கம் கிடைத்திருக்கிறது. அதற்க்கு மனித முகத்தின் வடிவமும் ஒரு காரணம் என்கிறது. மனித முகத்தில் மண்டை ஓட்டின் அமைப்பு கபாலத்தின் அடிப்பகுதியில் தொடங்கி குரல் வளையின் கீழ் பகுதி வரை தொண்டை என்கிறது மருத்துவம். இத்தத் தொண்டையை மேலும் 3 பகுதிகளாக பிரிக்கிறார்கள் மருத்துவர்கள். அதன்படி இணைந்த தொண்டை, குரல் வளையோடு இணைந்த உணவுக்குழாயானது தொண்டை வழியாக வயிற்றுக்குப் போகிறது. அதேபோல குழாயை கடந்து நுரையீ ரலுக்குப் போகிறது. இது கிட்டத்தட்ட ஒரு லெவல் கிராஸிங் போல செயல்படுகிறது. சுவாசப் பாதையை சாலை என்று வைத்துக்கொண்டால் உணவுப் பாதைதான் ரெயில்வே பாதை. சாலை எப்போதும் திறந்தே இருக்கும். அதேபோல்தான் சுவாசப்பாதை எப்போதும் திறந்தே இருக்கும். காற்று வந்து போய்க்கொண்டிருக்கும். உணவுப் பாதை ரெயில்வே பாதை போல எப்போதாவதுதான் அதில் ரெயில் வரும். ஆனால் ரெயில் வரும்போது சாலை மூடப்படும். அப்படித்தான் உணவு வரும்போது, அதாவது நாம் சாப்பிடும் போது சுவாசப்பா

பக்கவாதத்தைத் தடுக்கும் முட்டைக்கோஸ்

Image
முட்டைக்கோஸ், காலிபிளவர் போன்ற காய்கறிகளை தொடர்ந்து சாப்பிட்டால் பக்கவாதத்தைத் தவிர்க்கலாம் என்ற ஒரு புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்டனர். அவர்கள் சுமார் 70 வயதான 954 பெண்களிடம் இந்த ஆய்வை நடத்தினர். அவர்களிடம் பல்வேறு கேள்விகள் கேட்டு அறிந்தனர். ஆய்வின் முடிவில் அவர்கள் தெரிவித்த தகவல்: வயதில் மூத்த பெண்கள் முட்டைகோஸ், காலிபிளவர் போன்றவற்றை சாப்பிட்டு வருவதால் பக்கவாத நோய் அபாயத்தில் இருந்து விடுபடுகிறார்கள். தினமும் மூன்று வேலை உணவில் காய்கறிகளைச் சேர்ந்து சாப்பிட்டு வருவதால் ரத்த நாளங்கள் வலுவடைகின்றன. மேலும், முட்டைக்கோஸ் வகைகளை சாப்பிடுவதால் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைந்து விடுகின்றன. அமெரிக்காவில் உள்ள, இதயத்தைப் பாதுகாக்கும் அமைப்பின் சார்பில் வெளிவரும் இதழில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆய்வில் ஈடுபட்ட டாக்டர் லாரன் பிளாகன் ஹார்ஸ்ட் கூறுகையில், இந்த ஆய்வின் மூலம், இதயத்துக்க்குச் செல்லும் ரத்த நாளங்கள் வலுவடைய சத்தான காய்கறிகள் சாப்பிடுவது அவசியம் எனத் தெ

மகத்தான பாரம்பரியப் மருதாணியின் பயன்கள்

Image
மருதாணி வைத்துக்கொள்வது நம் பாரம்பரியப் பழக்கம். இன்று செயற்கை மருதாணி வந்துவிட்டாலும், இன்னுமும் கிராமங்களில் மருதாணிக்கே தனி மவுசு, மருதானியின் இலை, பூ, பட்டை அனித்தும் பலன்கள் தரக்கூடியவை. ‘அழவனம்’, ‘ஐவனம்’, ‘சரணம்’ என வெவ்வேறு பெயர்கள் இதற்கு உண்டு. எலுமிச்சைக் சாறு அல்லது புளித்த காடி நீர்விட்டு, மருதாணி அரைத்துப் பூசினால், மூட்டுவலி, கை கால் வலி, குடைச்சல், உடல் எரிச்சல் சரியாகும். உள்ளங்கையில் எரிச்சல் ஏற்பட்டால், இரவு படுக்கும்போது மருதாணி இலையை எடுத்து அரைத்து, தேய்த்துவிட்டுப் படுத்தால், காலையில் எரிச்சல் நீங்கிவிடும். நகப்புண், சுளுக்கு, மற்ற புண்களின் மீது இதன் இலையைக் கசக்கிவைத்துக் கட்டுப்போட்டால், புண்கள் குணமாகும். மருதாணி இலைச்சாறு அரைக் கரண்டி எடுத்து, 90 மி.லி பாலில் கலந்து குடித்தால், கை, கால், உடல்வலி நீங்கும். அதே அளவு சாற்றைப் பாலுக்குப் பதிலாகத் தண்ணீரில், நாட்டுச்சர்க்கரை சேர்த்துக் கலந்து குடித்தால், தாதுஉற்பத்தி பெருகும். ஆறு கிராம் மருதாணி இலையை எடுத்து, ஒரு பூண்டு, ஐந்து மிளகு சேர்த்து அரைத்து, காலை தோறும் ஐந்து நாட்கள் உப்பு இல்லா பத்தியத்துடன் ச

பற்களுக்கு நலம் சேர்க்கும் ஊட்டச்சத்துமிக்க உணவு வகைகள்.

Image
ஊட்டச்சத்துமிக்க உணவு வகைகளை சாப்பிடுவது முக்கியம் அல்ல. அவைகளை சாப்பிட்டு முடித்த பிறகு பற்களை பராமரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் வாய் துர்நாற்றம், பல் சிதைவு, பல் சொத்தை, பல் வலி போன்ற பிரச்சினைகள் உருவாகக் கூடும். ஒருசில உணவு வகைகளை சாப்பிடுவதை தவிர்ப்பதும் பற்களுக்கும் நலம் சேர்க்கும். உடலின் ஆரோக்கியத்தை சீராக பராமரிக்க பழ வகைகள் சாப்பிடுவது நல்லது. எனினும் அவை பற்களின் ஆரோக்கித்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதிலும் அசிட்டிக் அமிலங்களை உள்ளடக்கிய பழங்காளான ஆப்பிள், திராட்சை, போன்றவை பற்களின் எனாமலை பாதிக்க செய்பவை. அவைகளை சாப்பிட்டதும் உடனே வாய் கொப்பளித்து பல்லை சுத்தம் செய்ய வேண்டும் காபி பருகுவது உடலுக்கு கேடு விளைவிக்கும். பல் சொத்தை மற்றும் வாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உருவாகும். அதனால் காபி குடித்து முடித்ததும் வாய் மற்றும் பற்களை சுத்தம் செய்வது நல்லது. ரொட்டிகளில் இனிப்பு சுவை குறைவாக இருந்தாலும் அவை பல் இடுக்குகளில் சிக்கி விட்டால் பிரச்சனையை ஏற்படுத்தும். எந்த உணவை சாப்பிட்டாலும் உணவு துகள்கள் பல் இடுக்குகளில் சேராமல் பார்த்துக்கொள்ள வேண்

அளவில் சிறியதாக இருக்கும் கொசு தரும் கொடிய நோய்கள்

Image
உலகளவில் கொடிய நோய் பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்தான உயிரினங்களில் ஒன்றாக கொசுக்கள் இருக்கின்றன. அளவில் சிறியதாக இருக்கும் இவை உயிருக்கே உலை வைக்கும் தன்மை கொண்டவை. ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் கொசு கடியால் நோய் வாய்ப்பாட்டு உயிரிழக்கிறார்கள். மலேரியா, மஞ்சள் காமாலை, டெங்கு, மூளை அழற்சி, சிக்கன்குனியா, ஜிகா வைரஸ் போன்ற பல்வேறு நோய் பாதிப்புகளை கொசுக்கள் ஏற்படுத்துகின்றன. மலேரியா: இது ஒருவகை ஒட்டுண்ணி நோயாகும், இது அனோபிலீஸ் என்ற கொசு மூலம் பரவுகிறது. இந்த கொசுக்கள் வெப்ப மண்டல பிரதேசங்களில் உயிர்வாழும் தன்மை கொண்டவை. மலேரியா நோய் பாதிப்புக்கு காய்ச்சல்தான் தொடக்க அறிகுறியாக இருக்கும். சாதாரண உடல்நல பாதிப்பாகத்தான் ஆரம்பத்தில் தெரியும். பின்னர் தலைவலி, தசை வலி, குறைந்த ரத்த அழுத்தம், சுய நினைவை இழக்கும் நிலைக்கு ஆளாகுதல், கடும் குளிர் போன்ற அறிகுறிகள் தென்பட தொடங்கும். மெல்ல மெல்ல நோயின் தாக்கம் அதிகமாகி கடும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். ஸ்போரோ சோயிட்டுகள் எனும் ஒட்டுண்ணிகள் ரத்த ஓட்டத்தில் ஊடுருவி சிவப்பு அணுக்களுக்கு பாதிப்பை உண்டாக்கிவிடும். டெங்கு: ஏடீஸ் வகை கொசுக்கள் டெங்

நாம் நல்ல பழக்கவழக்கங்களை உருவாக்குவோம்

Image
நல்ல பழக்கவழக்கங்கள் நம்மை உருவாக்கும் என்கிறார் பிரபல ஆங்கில கவிஞர் ஜான் டிரெயின் இதைச் செய்யலாமா அதைச் செய்யலாமா என நமக்கு ஒரு நாளில் பல வாய்ப்புகள் இருக்கின்றன அதில் எதைத் தேடுகிறோமோ அதை பொறுத்துதான் அந்த நாள் அமையும் நாம் எதைச் சிந்திக்கிறோமோ அதுவே செயலாகிறது நாம் எதைச் செய்கிறோமோ அது பழக்கமாகிறது நாம் எதை வழக்கமாக வைத்து வைக்கிறோமோ அது நம் குணாதிசயம் ஆகிறது எனவே நம்மை வடிவமைப்பதில் நம் எண்ணங்களும் பழக்கவழக்கங்களும் தான் நல்ல பழக்கவழக்கங்கள் இலவசமாக அவற்றை நாம் பின்பற்ற வேண்டும் என்ற எண்ணமும் செயலும் முக்கியம். ஒரு நாளை எவ்வாறு செலவிடுகிறோம் என பட்டியலிட்டுப் பாருங்கள். குழந்தைப் பருவத்திலிருந்து தொடங்கிய பலன்கள் என்னென்ன வளரும் பருவத்தில் கற்றுக்கொண்டது என்னென்ன... நண்பர் மற்றும் உறவினரிடம் இருந்து கற்றுக்கொண்டவை என்னென்ன? சிந்தித்துப்பாருங்கள். தூங்கச் செல்லும் முன் பல் தேய்ப்பது, வெயிலில் செல்லும் போது சொல் செல்லும்போது செருப்பு, ஸ்லீப்பரைத் துடைப்பது இப்படியான நல்ல பழக்கங்கள் முதல், புகை பிடித்தால் தான் இந்த நட்பு வட்டாரத்தில் நம்மை மதிப்பார்கள், மது அருந்துவது, பார்ட்