Posts

Showing posts from 2018

கேரட்,வெள்ளரி மருத்துவ பயன்கள்

Image
கேரட் : கேரட்டை தோல் சீவக்கூடாது. தோலுக்கு நெருக்கமாகத் தான் தாதுக்கள் உள்ளன. பச்சையாகவோ, சமைத்தோ உண்ணக் கூடிய கிழங்கு இது. அல்வா போன்ற இனிப்பு செய்யவும், குழம்பு, பொரியலை செய்யவும் கேரட் பயன்படும். கேரட் சாறு குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் ஆரோக்கியம் அளிக்கிற பானம். கண்களுக்கு வலிமையைத் தரும். பெண்களுக்கு கேரட் விதைகளை தங்களுடைய கர்ப்பத்தின் தொடக்க காலத்தில் பயன்படுத்தக் கூடாது. கர்ப்பப்பையின் சுவர்களில் அது நச்சுத்தன்மையை ஏற்படுத்தி கருச்சிதைவுக்கு காரணமாகும். சாப்பாட்டிற்கு பிறகு ஒரு கேரட்டை மென்று தின்றால் கெடுதல் விளைவிக்கக்கூடிய கிருமிகள் அழிந்துவிடும். பற்களைச் சுத்தமாக்கும். ஈறுகளில் இரத்தம் கசிவதைத் தடுக்கும். பற்சிதைவையும் தடுக்கும்.  கேரட் சூப் வயிற்ருப்போக்கை குணப்படுத்தும் ஒரு இயற்கை நிவாரணி, சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை உள்ளவர்கள் கேரட்டை தாராளமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். கேரட்டை மென்று தின்ன வாய்நாற்றம் தீரும். கேரட்டை அரைத்து அரைவேக்காடு முட்டையும், தேனும் கலந்து உண்டால் ஆண்மை சக்தி பெருகும். கேரட் விதை ஒரு தேக்கரண்டி அளவு

அரைக்கீரை மற்றும் பொன்னாங்கண்ணி கீரைகளில் உள்ள சத்துக்கள்!

Image
அரைக்கீரை: அரைக்கீரை (ஒலிப்பு) அல்லது குப்பை கீரை என்பது தமிழர் சமையலில் இடம்பெறும் கீரைகளில் ஒன்றாகும். சித்த மருத்துவத்தில் காய்ச்சல், குளிர் சன்னி, கப நோய் போன்ற நோய்களுக்கு மருந்தாக இக்கீரை கூறப்பட்டுள்ளது. தோசை, கூட்டு, சூப், கூட்டல், வடை, மசியல் என பல வகைகளில் அரைக்கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இது கீரையாகத் தெற்காசியாவிலும் தென்கிழக்காசியாவிலும். ஆப்பிரிக்காவிலும் போற்றி உண்ணப்படுகிறது. அரைக்கீரை உடலுக்கு வெப்பத்தை கொடுப்பதினால் மகப்பேறு பெற்ற பெண்களுக்கு ஒரு முக்கிய உணவாக அளிக்கபடுகிறது. அதோடு பிரசவத்தால் எற்படும் உடல் மெலிவை போக்கி, உடலுக்குச் சக்தியையும், பலத்தையும் கொடுக்கின்றது. · வைட்டமின் ஏ, பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம் நிறைவாக உள்ளன. · நுரையீரல் சார்ந்த நோய்கள் மற்றும் கபத்துக்குச் சிறந்த மருந்தாக விளங்குகிறது. · ரத்தத்தைச் சுத்திகரிக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். · உடலுக்கு வெப்பத்தை அளிக்கக் கூடியது. அரைக்கீரைச் சாறுடன் மிளகு, சீரகம் சேர்த்துக் கஷாயம் வைத்துக் குடித்துவந்தால், சளி, இருமல் நீங்கும்.

முருங்கைக் கீரையில் என்னென்ன சத்துக்கள் உள்ளன.

Image
‘கீரை உடலுக்கு மிகவும் நல்லத’ என்று யாரைக் கேட்ட்டலும் சொல்வார்கள். ஆனால், வாரத்துக்கு ஒருநாள் கூட கீரை சேர்த்துக்கொள்ளாத குடும்பங்கள்தான் நம் ஊரில் அதிகம். கீரைகள் ஊட்டச்சத்துக்கள், தாதஊப்புக்களின் சுரங்கம், வைட்டமின் சி, போலிக் அமிலம், பொட்டாசியம், மக்னிசியம், பீட்டாகரோடின், நுண்ட்டச்சத்துக்கள் என அனைத்தும் கீரைகளில் நிறைந்துள்ளன. கலோரி மிகக் குறைவு என்பதால், உடல் எடையை கட்டுக்குள் வைக்க இது சிறந்த உணவு. நார்ச்சத்து நிறைந்தது என்பதால், செரிமானப் பிரச்னையைத் தவிர்க்கிறது. புற்றுநோய், இதய நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது. அதிக மக்னீசியம், குறைவான கிளைசமிக் இன்டெக்ஸ் கொண்டதால், டைப் 2 சர்க்கரை நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது. தினம் ஒரு கீரையை சேர்த்துக்கொள்வதன் மூலம் தொற்றுநோய் முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் தவிர்க்க முடியும். கீரைகளில் என்னென்ன சத்துக்கள் உள்ளன. அவற்றின் பலன் என்ன என்பதை பாப்போம். முருங்கைக் கீரை முருங்கை மரத்தில் இருந்து பெறப்படும் முருங்கைக்காய், முருங்கை இலை, முருங்கைப் பூ உண்ணப்படும் ஒரு உணவு ஆகும். இதில் "muringa" என்ற பெயர், "முரு

தொலைவில் இருந்து கவர்ந்து இழுக்கும் நறுமணம் கொண்ட நாகலிங்க மலர்கள்.

Image
நாகலிங்க மலர் இளஞ்சிவப்பு மற்றும் சிவப்பு வண்ணம் கலந்த மாறுபட்ட தோற்றம் கொண்டது நாகலிங்க மலர்கள். தொலைவில் இருந்து கவர்ந்து இழுக்கும் நறுமணம் கொண்டது இந்த மலர்கள். மகரந்த தூவிகள் படமெடுத்து ஆடும் பாம்பு போல் வித்தியாசமாக இருப்பதால், இதன் பெயரும் வித்தியாசம்தான். நாகலிங்க மரங்கள் நீலகிரி மழைப் பகுதியில் ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. மிதமான தட்பவெப்ப நிலையில் வளரும் தன்மை கொண்டது இந்த மரங்கள், நீலகிரி மாவட்டம் பர்லியாறு பகுதியில் அதிகம் காணப்படுகின்றன.  கடல் கடந்து வந்த மரம் பல தாவரங்கள் கடல் கடந்து நம் மண்ணை வந்தடைந்துள்ளன. அவை நம்மிடையே பரவலானது மட்டுமில்லாமல், உள்ளூர் மக்களின் ஆதரவைப் பெற்று நமது கலாசாரத்தின் ஒரு பகுதியாகவும் மாறி விடுவது உண்டு. அவற்றில் ஒன்றுதான் இந்த நாகலிங்க மரமும்.  இதன் தாவரவியல் பெயர் கொரூபியா கினென்சிஸ். தென் அமெரிக்காவின் வெப்ப மண்டல பகுதிகள் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளை தாயகமாகக் கொண்ட இந்த மரம் லேசிதிடசாய் தாவரவியல் குடும்பத்தைச் சேர்ந்தது.  இது 30-35 மீட்ட உயரம் வரை வளரக்கூடியது. இலங்கையின் சில பகுதிகளிலும் நாகலிங்க மரங்கள் காணப்பட

கைகளை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருங்கள்!

Image
கைகளை சுத்தமாக வைத்திருப்பதே நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாக்க உதவும். கைகளில் படிந்திருக்கும் கிரிமிகள், உடலுக்குள் சென்று பல்வேறு உபாதைகளுக்கு காரணமாகிவிடுகின்றன. அதனால் நன்றாக கைகளை கழுவ வேண்டும். எப்படி தெரியுமா? சாப்பிடுவதற்கு முன்பு குறைந்தபட்சம் 20 நொடிகளாவது சோப்பிட்டு கைவிரல்களை தேய்த்து கழுவ வேண்டும். விரல் இடுக்குகளை சுத்தப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் ஈ.கோவை போன்ற பாக்டீரியாக்கள் அதிலிருந்து நோய் பாதிப்புக்கு உள்ளாகி விடும். கைகளை கழுவிய பிறகே ஈரப்பதமான நிலையிலேயே உலர வைத்து விடக்கூடாது. தவளை கொண்டு துடைக்க வேண்டும். மூன்று முறைக்கு மேல் தவளை துவைக்காமல் பயன்படுத்தக்கூடாது. அடுத்தவர்களின் தவளையும் உபயோகப்படுத்தக் கூடாது. நோய்வாய்ப்டிருப்பவர்களை பார்த்து நலம் விசாரிக்கச் சென்றிருந்தால் வீடு திரும்பியதும் மறக்காமல் கைகளை கழுவி விட வேண்டும். காயங்களுக்கு மருந்திட்டுவதற்கு முன்பும், பின்பும், கைவிரல்களை சுத்தமாக தேய்த்து கழுவுங்கள். ஒரு சிலர் காயங்களுக்கு மருந்து போட்ட பிறகுதான் கைகளை கழுவுவார்கள். அது தவறான பழக்கம். கைகளில் படிந்திருக்கும் கிருமிகள் காயங்களில் பட

டெங்கு காய்ச்சல் எதனால் ஏற்படுகிறது? அதைக் கட்டுப்படுத்துவது எப்படி?

Image
டெங்கு கொசு பணமும், வசதிகளும் மட்டுமே மகிழ்ச்சியின் அளவுகோல் அல்ல. வியாதி இல்லாத உடம்பும், வேதனை இல்லாத மனதும் தான் நிறைவான வாழ்க்கை. நோயுறும்போது தான் வாழ்க்கையின் அருமை தெரியும். மக்கள் தொகை பெருக்கமும், உணவுமுறை மாற்றம், வாழ்க்கை முறை மாற்றம், சுகாதார சீர்கேடு போன்றவற்றால் நாட்டு வியாதிகளுக்கு பஞ்சமில்லை. தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்து இருக்கிறது. சென்னை உள்ளிட்ட சில ஊர்களில் இந்த காய்ச்சலால் சிலர் உயிரிழந்திருக்கிறார்கள். டெங்கு காய்ச்சல் எதனால் ஏற்படுகிறது? அதை கட்டுப்படுத்துவது எப்படி? என்பன போன்ற விவரங்கள் பற்றி நாம் பார்ப்போம். உலக அளவில் சுமார் 200 கோடி மக்கள், மனித கழிவு கலந்த நீரை பருகுவதால் வாந்தி, பேதி, காலரா, டைபாய்டு, போலியோ போன்ற வியாதிகளால் பாதிக்கப்படுகிறார்கள். வயிற்றுபோக்கால் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 லட்சம் பேர் இறக்கிறார்கள். இந்தியாவில் 70 சதவீத மேற்பரப்பு நீரும், மிகுந்த அளவிலான நிலத்தடி நீரும், சாக்கடை, தொழிற்சாலை, நச்சுப் பொருட்கள், மேலும் மனித கழிவால் மாசு அடைகின்றன. இந்தியாவிலுள்ள எந்த ஒரு நீர்நிலை நீரும

காடை பிரியாணியும் அதில் உள்ள சத்துக்களும்

Image
காடை  ( ஆங்கிலம் : Quail) காடை  ( ஆங்கிலம் : Quail) என்பது   ஃபசியானிடே  ( தொகையுடைப் பறவைகள் ) குடும்பத்தில் உள்ள நடுத்தர அளவு கொண்ட பல   பறவை இ னங்களைக்   குறிக்கும் பெயர்ச்சொல்லாகும்.   புது உலகக் காடைகள்  ( ஓடோண்டோஃபோரிடே   குடும்பம்) மற்றும்   பட்டன் காடைகள் ( டுர்னிசிடே   குடும்பம்) ஆகியவை நெருங்கிய தொடர்புடையவை அல்லன , எனினும் அவற்றின் தோற்றம் மற்றும் பழக்க வழக்கங்களின் காரணமாகக் காடைகள் என ஒரே பெயரில் வழங்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சில பகுதிகளில் இறைச்சிக்காக ஜப்பானியக் காடைகள் வளர்க்கும் பணி நடைபெற்று வருகிறது.  இந்தக் காடைகள் தமிழ்நாட்டின் குறிப்பிட்ட சில அசைவக் கடைகளில் மட்டும் உணவாகப் பயன்படுத்தப்பட்டாலும் , இந்தக் காடை இறைச்சியில் சில மருத்துவக் குணங்கள் இருப்பதாகக் கருதப்படுவதை அடுத்து வீடுகளில் இருப்பவர்களும் வாங்கத் தொடங்கியிருப்பதால் காடை வளர்ப்பில் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். மதியம் எங்காவது சாப்பிட்டுவிடலாம் என்று முடிவாகிவிட்டது . ஆசிரியராக இருக்கும் நண்பன் உடன் இருந்தான் . நான் கடைவருவலை கொண்டுவருமாறு சொன்னேன் . சாப்ப

ஆடு, கோழி ஈரல் சாப்பிடலாமா? கூடாதா?

Image
ஈரல் சுவைக்கு பலர் அடிமையாகிவிட்டார்கள் என்றே சொல்லவேண்டும் . ரொம்ப மென்மையாக அப்படி ஒரு ருசிஎன்று சொல்லக் கேட்டிருக்கிறேன் . வட்டில் கோழி அறுத்தால் ஒரு துண்டு ஈரல் கிடைக்கும் . சிலர் சுட்டு தின்பார்கள் . குழம்பில் போட்டால் தனியாக மிதக்கும் . கறி வெந்த பிறகு கொஞ்ச நேரம் கழித்து போட வேண்டும் . ஆட்டு ஈரல் கடைகளில் சாதாரணமாக கிடைக்கும் . இப்போது சிக்கன் கடைகள் முளைத்தபின்பு கோழி ஈரலும் எங்கும் கிடைக்கிறது . நண்பர் ஒருவர் சொல்லிக்கொண்டிருந்தார் ," கோழி ஈரல் சாப்பிடக்கூடாது பாஸ் " ஆட்டு ஈரல் சாப்பிடலாம் என்றார் . ஆனால் அவரால் காரணத்தைச் சொல்லி விளக்க முடியவில்லை . வதிதோறும் அசைவக் கடைகள் பரவிவிட்ட நிலையில் இப்போது ஈரல் கிடைப்பது சுலபம் . ஆனால் நண்பர் சொன்னது போல பலருக்கு குழப்பம் இருப்பதை கவனித்திருக்கிறேன் . உயிர்ச்சத்துக்களை சேமித்து வைத்து தேவையானபோது வழங்குவது ஈரலின் முக்கிய பணி . முக்கியமான ஊட்டச்சத்துகளை கொண்டிருக்கிறது ஈரல் . அனைத்து உயிர்ச்சத்துக்களும் இதில்

ஆரோக்கியம் காக்கும் நிலக்கடலையின்(Peanut) மருத்துவ பலன்கள்.

Image
நிலக்கடலை   அல்லது   வேர்க்கடலை   அல்லது   கச்சான்   (peanut ) என்பது பலரால் விரும்பி உண்ணப்படும்   கொட்டைகளைத்   தரும் பருப்பு வகை   தாவரம்   ஆகும். இது நடு தென் அமெரிக்காவுக்கு பூர்வீகமானது. சீனா , இந்தியா , நைஜீரியா ஆகிய நாடுகள் இதை அதிகம் உற்பத்தி செய்கின்றன. இது வட்டார வழக்குகளில் வேர்க்கடலை , மணிலாக்கடலை , கடலைக்காய் , மணிலாக்கொட்டை (மல்லாட்டை) எனப் பலவாறாக வழங்கப்படுகிறது. நிலக்கடலையை அவித்தோ அல்லது வறுத்தோ உண்ணப்படுகிறது. வெல்லப்பாகுடன் கலந்து கடலை மிட்டாயாக உண்ணப்படுகிறது. பொடித்து இனிப்புருண்டைகளாக தயாரிக்கப்படுகிறது. கடலை   காந்தியடிகளுக்குப்   பிடித்த உணவாகும். பலகாரம் செய்வதெல்லாம் கடலைஎண்ணெயில்தான் இருக்கும் தினசரி சமையலுக்கும் தாளிக்கவும் தான் தலைக்குவைத்துக்கொள்ள தேங்காய் எண்ணெய் , தலைதேய்த்துக்குளிக்க நல்லெண்ணெய் வேறு எண்ணெய்யைப்பற்றி கேள்விப்பட்ட்தில்லை . நிறைமாத கர்ப்பிணிகள் இருந்தால் ஆமணக்கு எண்ணெய் தயாராக இருக்கும் அதிலும் சிற்றாமணக்கு என்றால் கொஞ்சம் சிறப்பு . செக்குவைத்து எண்ணெய் எடுத்துத்தர ஒரு சாதி உண்டு