Posts

Showing posts from September, 2015

நெஞ்செரிச்சலை குணமாக்க சில வழிகள்!

Image
நெஞ்செரிச்சல் என்பது தற்போது சாதாரண விஷயமாகி விட்டது. நேராநேரத்துக்கு சாப்பிடாததும் முறையற்ற உணவும் தான் நெஞ்செரிச்சல் ஏற்பட காரணம். சாப்பிடும் உணவை செரிக்க வைப்பதற்காக வயிற்றில் அமிலம் சுரக்கிறது. அப்படி சரியான உணவை எடுத்துக் கொள்ளாத போது இரைப்பையில் சுரக்கும் அமிலம் அதிகமாக சுரக்கத் தொடங்கும். அப்போது தேங்கி இருக்கும் அமிலமானது வயிற்றெரிச்சலை தோற்றுவிக்கும். இந்தநிலையில் இறுக்கமான உடை அணிந்து இருந்தாலோ அல்லது அதிக காரம் மிகுந்த உணவை சாப்பிடும் போதோ அந்த அமிலமானது உணவுக்குழாய் வழியாக மேலே சென்று, நெஞ்சில் எரிச்சலை ஏற்படுத்துகிறது. இதை ஒருசில உணவுகள் மூலம் சரிசெய்ய முடியும். இது தவிர சரியான நேரத்தில் சாப்பிடுவது, குறைந்தது 8 மணி நேரம் தூங்குவது, தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வது போன்றவற்றை பின்பற்றுவதால் சரி செய்யலாம். நெஞ்செரிச்சலை சில பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவதன் மூலம் குறைக்கலாம். கால்சியம் அதிகம் உள்ள உணவுகளும் நெஞ்செரிச்சலை சரிசெய்யும். ஆப்பிளில் கார்போ ஹைட்ரேட் அதிகம் உள்ளது. எனவே வயிற்றில் அல்லது நெஞ்சில் எரிச்சல் ஏற்படும் பொது, அப்பிளை சாப்பிட்டால்