சுவையின்மை,பசியின்மை நீங்க ஆதொண்டை சாப்பிடுங்கள்

ஆதொண்டை

தனியிளைகளைக் கொண்ட முள்ளுள்ள ஏறு கொடி. செந்நிற பூக்களையும் சதைக் கனியையும் கொண்டது. காய்கள் சமைத்து உண்ணக் கூடியவை. தமிழகமெங்கும் வேலிகளில் தானாகவே வளர்கின்ற கொடியினம். இலை, காய், வேர் ஆகியவை மருத்துவப் பயன் உடையவை.

நோய் நீக்கி உடல் தேற்றவும், பசி உண்டாக்கவும் நாடிநடையை மிகுத்து உடல் வெப்பம் தரவும் மருந்தாகப் பயன்படுத்தலாம்.

  • இலையை நெய்யில் வதக்கி துவையலாக்கி உணவுடன் கொள்ள சுவையின்மை, பசியின்மை நீங்கி பசி உண்டாகும்.
  • 50 கிராம் வேர்ப்பட்டையை நன்கு இடித்து 1 லிட்டர் நீரில் விட்டு 100 மி.லி ஆகக் காய்ச்சி வடித்து மூன்று பங்காக காலை, மதியம், மாலை சாப்பிட்டு வரப் பசியின்மை, வாந்தி, மார்பு வலி தீரும்.
  • இலை சாற்றில் சம அளவு திப்பிலியை ஊற வைத்து, பிறகு காயவைத்து பொடி செய்து தினமும் 2 கிராம் பொடியை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் நன்றாக பசி எடுக்கும்.
  • வேரை இடித்து நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் மூக்கடைப்பு, தொண்டைக்கட்டு, மண்டைக் குடைச்சல் போன்றவை தீரும்.
  • காயை வற்றலாக்கி அதை சமையலில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கண் நோய்கள் அனைத்தும் தீரும்.
  • இலையை மோர் சேர்த்து அரைத்து சாறு எடுத்து, தினமும் 50 மில்லி அளவு குடித்து வந்தால் கட்டி உடைந்து சிறுநீர் தாராளமாக வெளியேறும்.
  • இலையுடன் சீரகம் சேர்த்து கசாயம் காய்ச்சி 50 மில்லி அளவுக்கு தினமும் குடித்து வந்தால் இரைப்பை சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்தும் குணமாகும். மேலும் மந்தம், வாந்தி, நெஞ்சுவலி போன்றவை தீரும்.

Comments

Popular posts from this blog

ஆடு, கோழி ஈரல் சாப்பிடலாமா? கூடாதா?

காடை பிரியாணியும் அதில் உள்ள சத்துக்களும்

நல்லெண்ணெய் குளியல் செய்வது எப்படி?